எனது
வயது வளமை
கனவு கல்வி
உறவு நட்பு
உயரம் எடை
தொடர்பு தொழில்,
இன்னும்
ஏதேதோ ஆரய்ந்து
தயங்குகிற உன்னை,
உயிராய்க்கொள்ள
உன் ஒற்றை
தெற்றுப்பல் சிரிப்பே
போதுமானதாக இருக்கிறது எனக்கு.
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
+-+-+-+-+-+-+-+-+-+-+-
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
+-+-+-+-+-+-+-+-+-+-+-
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
+-+-+-+-+-+-+-+-+-+-+-