உன்னை நினைத்து திரையரங்கில்.. எங்கே தொலைப்பதென அலைந்து திரிந்து மீண்டும் வீட்டிற்குத் திரும்பினேன். செருப்புகளைக் கழற்றுகையில் உறைத்தது! உன் நினைவுகளைக் காணவில்லை!! மகிழ்ச்சியாய் நுழைந்து படுக்கையறையைத் திறந்தேன் அங்கே... அலைந்த களைப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. என் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன உன் நினைவுகள்! |
Friday, August 6, 2010
உன் நினைவுகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment