Monday, January 31, 2011

காதல் சதா ரணம்

சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்
- ரா. பார்த்திபன்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

ஒரு
பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும்
உன்னைப் பற்றியே
கனவு காண்கிறேன்.
நீயோ
பிள்ளை பெற்று
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பகலில் உறங்கப் பழகிவிட்டாய்....

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவதுசந்தித்துக் கொள்ளட்டுமே"

-அறிவுமதி

+-+-+-++-+-+-+-+-+-+-+-+-+-+--+-+-+-+-+-+-+-
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?
- தபூ சங்கர்
+-+-+-+-+-+-+-+-+-+-+-

No comments: