Wednesday, August 27, 2008

உன்னை இழந்ததற்கு பதிலாய்....

நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது..

Thursday, June 26, 2008

ஏனேன்றால் நீ பெண் ............

எனது

வயது வளமை

கனவு கல்வி

உறவு நட்பு

உயரம் எடை

தொடர்பு தொழில்,

இன்னும்

ஏதேதோ ஆரய்ந்து

தயங்குகிற உன்னை,

உயிராய்க்கொள்ள

உன் ஒற்றை

தெற்றுப்பல் சிரிப்பே

போதுமானதாக இருக்கிறது எனக்கு.


நீ!...



நான் விருப்பப்பட்டது

என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!


**

உன் நினைவுகளே

வாழ்க்கை
என்றான பிறகு

நீ

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?

+-+-+-+-+-+-+-+-+-+-+-

குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..

+-+-+-+-+-+-+-+-+-+-+-

செடி கொடி மரத்தில்

மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
+-+-+-+-+-+-+-+-+-+-+-

என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

அத்தி பூத்தது...

உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உன்னிடம் பேச

எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .

**


என்னை கொல்ல

வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

+-+-+-+-+-+-+-+-+-+-+-

மன்னித்து விடு!

நான் உன்னை
ஒருநாள் ஒருகணம்
மறக்க
மறந்துவிட்டேன்….

+-+-+-+-+-+-+-+-+-+-+-

செடியில் பூத்துக்கொண்டே

உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??